tamilnadu

img

திருவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு சிபிஎம் இரங்கல்....

சென்னை:
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

காங்கிரஸ் கட்சியின் திருவில்லிபுத்தூர் வேட்பாளர் மாதவராவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தந்துள்ளது. அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோகமாக வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. திருவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மாதவராவ் அவர்களும் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில் அவரது திடீர் மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், திருவில்லிபுத்தூர் மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலையும், அனுதாபத்தை யும் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;