திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் சிறப்பு நூலகம்
திருவண்ணாமலை, ஜூன் 11 - பள்ளிக்கல்வித் துறை சார்பில் பொது நூலக இயக்கம் சார்பில் ரூ.29.80 கோடி மதிப்பீட்டில் அனைத்து மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலகக் கட்ட டங்கள் மற்றும் 70 சிறப்பு நூலகங்களை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார். அதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சிறப்பு நூலகக் கட்டடத்தை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் முன்னிலை யில், சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி துவக்கி வைத்தார்.அப்போது பேசிய கு.பிச்சாண்டி,“திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அனைத்து வகையான நூல்களும் கிடைக்கும் வகையிலும், மாண வர்கள் பயன்பெறும் வகையிலும் சிறப்பு நூல கம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலு வலர் வள்ளி மற்றும் துறை சார்ந்த அலு வலர்கள் கலந்துகொண்டனர்.