tamilnadu

போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாடு

சங்கம் வைக்கும் உரிமைக்காக போராடும் சாம்சங் தொழிலாளர்களு டனான தங்களின் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில், அக்டோபர் 16-ஆம் தேதி அனைத்துத் தொழிற்சங்கங் கள் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்  பட்டு உள்ளது. மாவட்டதலைநகரங்களில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களில், அனைத்துப் பகுதி தொழிலாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டு உள்ளது.

ஆலோசனைக் கூட்டம் 

அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம், வியாழனன்று (அக்.10) காலை 11 மணிக்கு, தமிழ்நாடு  ஏஐடியுசி அலுவலகத்தில், அதன் மாநிலப் பொதுச்செயலாளர் ம. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

டி.எம். மூர்த்தி (ஏஐடியுசி), ஜி. சுகு மாறன். எம். சந்திரன், ஏ. கிருஷ்ணமூர்த்தி, (சிஐடியு) வி. விஜயகுமார், எஸ். நந்த குமார் (எச்எம்எஸ்) பா. சுகுமாரன் (ஐஎன்டி யுசி), வி. சிவக்குமார், ஈ. சடையாண்டி (ஏஐயுடியுசி) சொ. இரணியப்பன் (ஏஐசிசிடியு), எஸ். மாயாண்டி (டியுசிசி), இரா. அந்திரிதாஸ், (எம்எல்எப்) இரா. சம்பத் (டபுள்யுபிடியுசி) ஈ. சண்முகவேலு (எல்டியுசி) க. பேரறிவாளன் (எல்எல்எப்) உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.

\இந்தக் கூட்ட முடிவிலேயே, ‘சாம்சங்’ தொழிலாளர்களுக்கு ஆதரவாக அக்டோ பர் 16 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது. 

11 தொழிற்சங்கங்கள் ஆதரவு

இதுதொடர்பாக, அனைத்துத் தொழிற் சங்கத் தலைவர்கள் க.அ.ராஜா ஸ்ரீதர் (எச்எம்எஸ்), ம. இராதாகிருஷ்ணன் (ஏஐ டியுசி), ஜி.சுகுமாறன் (சிஐடியு), டி.வி. சேவியர் (ஐஎன்டியுசி), வி. சிவகுமார் (ஏஐயுடியுசி), எம். திருநாவுக்கரசு (ஏஐ சிசிடியு), எஸ். மாயாண்டி (டியுசிசி), ஆர். சம்பத் (டபிள்யுபிடியுசி), இரா. அந்திரி தாஸ் (எம்எல்எப்), ஈ. சண்முகவேலு (எல்டியுசி), க. பேரறிவாளன் (எல்எல்எப்) ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது:

சென்னை அருகில் சுங்குவார்சத்தி ரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலை யின் தொழிலாளர்கள் தமக்கான தொழிற்சங்க உரிமை கோரியும் வேறு பல கோரிக்கைகளை முன்வைத்தும் 32  நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர்.

சாம்சங் அடாவடியால் போராட்டம் 

கடந்த 16 ஆண்டுகளாக எந்தத் தொழிற் சங்கமும் அமைக்காமல், நிர்வாகத்து டன் இணங்கிப் பணிபுரிந்து கொண்டி ருந்த தொழிலாளர்கள், தங்களை நிர்வா கம் படுகேவலமாக அவமானப்படுத்தி யதாலும், ஆலைக்குள் சுகாதார வசதி களைக் கூட சட்டப்படி செய்து கொடுக்காத தாலும், சம்பள உயர்வு பற்றி பேசவே மறுத்ததாலும், தொழிற்சங்கம் அமைக்க வேண்டிய கட்டாயத்துக்குதள்ளப்பட்டனர். 

இந்திய அரசியலமைப்புச் சட்டம்  சங்கம் சேரும் உரிமையை அங்கீகரிக் கிறது.‌ 1926-ஆம் ஆண்டின் தொழிற்சங்க சட்டம், சங்கத்தை பதிவு செய்வதற்கான வழிமுறைகளை நிபந்தனைகளை முன் வைக்கிறது. அச்சட்டத்தின்படி 

தொழிற்சங்கம் அமைத்து விண்ணப்பித்தால் அதனை 45 நாட்களுக்குள் பதிவுசெய்து தருவது தொழிலாளர் துறையின் கடமையாகும். 

சட்டத்தை மீறும் தொழிலாளர் துறை

தொழிற்சங்கத்தை அரசு பதிவு செய்வது குறித்து, நிர்வாகம் ஒப்புதல் தர வேண்டிய அவசியமோ, ஆட்சேபணை செய்வதற்கான வழிமுறையோ சட்டப்படி இல்லை. காரணமே இல்லாமல் சங்கத்தைப் பதிவுசெய்ய மறுப்பது சட்ட மீறல் ஆகும். தொழிலாளர் துறையே சட்ட  விரோத செயல்களில் ஈடுபடுவது கண்டனத் துக்குரியது. 

இதில், தீர்வு காண்பதற்காக அமைக்கப் பட்ட அமைச்சர்கள் குழு நிர்வாகத்திடம் தனியாகப் பேசிவிட்டு, நிர்வாகம் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டது என்றும், தொழிற்சங்கம் மட்டும் அமைக்கக் கூடாது என்றும் பொதுவெளியில் பேசுவது வருத்தம் அளிக்கிறது. இருதரப்பிடமும் பேசி முடிவுக்கு வருவதே பேச்சுவார்த்தை வடிவமாகும்.

படுமோசமான காவல்துறை அணுகுமுறை

எந்தச் சட்டத்தையும் மீறாமல், அமைதி யாக போராடிக் கொண்டிருக்கும் தொழி லாளர்களை, காவல்துறை அணுகும் முறை படுமோசமானதாக உள்ளது. எப்படியேனும் ஆத்திரமூட்டி, தகராறு நடைபெறுவது போல ஜோடித்து, ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல இதனையும் கலைத்து விட வேண்டும் என்று உத்வேகத்தோடு காவல்துறை கள மிறங்கி இருக்கிறது. 

தொழிற்சங்கத் தலைவர்களை கைது செய்வது, ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற அனைத்து தொழிற்சங்கத்தினரை ஆர்ப்பாட்ட மையத்துக்கே வரவிடாமல் கைது செய்து அகற்றுவது, இடதுசாரி கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வந்தபோது கைது செய்வது, சாலையை மறித்து போக்குவரத்தைத் தடுத்ததாக பொய் வழக்கு போடுவது, என காவல்துறையின் அத்துமீறல்கள் எல்லை கடந்து சென்று கொண்டிருக்கின்றன.

கைதானவர்களை விடுதலை செய்க!

நீதிமன்றக் கட்டளைப்படி, ஆலையின் அருகே அமராமல், தொலைவில் தனியார் நிலத்தில் தொழிலாளர்கள் அமைத்திருந்த பந்தலை காவல்துறை அகற்றி இருக்கிறது. 

அதன்பின்னும், அந்த இடத்திலேயே மழை பெய்து கொண்டிருந்த போதும் அமர்ந்திருந்த தொழிலாளர்களை ஒட்டுமொத்தமாக கைது செய்திருக்கிறது. 

அந்தப் பகுதியின் கடைகளை எல்லாம் மூட வைத்து பதற்றச் சூழலை உருவாக்கு கிறது. இந்த நடவடிக்கை சரிஅல்ல, உடனடி யாக இதைக் கைவிட வேண்டும். கைதுசெய்யப் பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும். 

சட்ட விதிகளுக்கு உட்பட்டும், அமைதி வழியிலும், ஜனநாயக முறையில் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கும் சாம்சங் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டின் தொழிலாளர்கள் அனைவரின் சார்பிலும் ஒருமைப்பாட்டையும் வாழ்த்துக்களையும் பாராட்டையும் இக்கூட்டம் தெரிவிக்கிறது.

கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்

அவர்களது தொழிற்சங்கத்தைப் பதிவு செய்து தரவும், அத்துமீறிய காவல் நட வடிக்கையை உடனே கைவிடவும், சங்கத் தோடு பேசி கோரிக்கைகளை நிறைவேற்றவும் வலியுறுத்தி, 16.10.2024 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், அனைத்துப் பகுதி தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது என இக்கூட்டம்  தீர்மானிக்கிறது. 

போராடுகிற சக தொழிலாளர்களுக்கு நமது ஒருமைப்பாட்டையும், ஆதரவையும் தெரி வித்து, இந்த ஆர்ப்பாட்டங்களில் பெருந்திர ளாகப் பங்கேற்க வேண்டும் என்று தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் அனைவரையும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.