tamilnadu

img

தனியார் பள்ளிகளுக்கு விற்கப்படும் அரசு பாடநூல்கள் விலை உயர்வு!

சென்னை, ஆக. 13- தனியார் பள்ளி மாணவர் களுக்கு விற்கப்படும் அரசு பாடநூல் கழக புத்தகங் களின் விலை ரூ. 30 முதல் ரூ. 80 வரை உயர்த்தப் பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாண வர்களுக்கான பாடப்புத்த கங்களை தமிழ்நாடு பாட நூல் கழகம் தயாரித்து அச்சி ட்டு விநியோகம் செய்து வரு கிறது. இதில், அரசுப் பள்ளி கள் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும்  மாணவர்களுக்கு இந்த புத்த கங்களை விலையில்லா புத்தகங்களாக தமிழக அரசு வழங்கி வருகிறது.

தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இந்த பாடப்புத்த கங்கள் விலைக்கு வழங்கப் பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தப் பாடப் புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 1 முதல் 4-ஆம் வகுப்பு வரையி லான பாடப் புத்தகங்கள் ரூ.30 முதல் 40 வரையும், 5  முதல் 7-ஆம் வகுப்பு புத்த கங்கள் ரூ. 30 முதல் 50  வரையும் உயர்த்தப்பட்டுள் ளன. 8-ஆம் வகுப்பு புத்தகம் ரூ. 40 முதல் ரூ. 70 வரை யும், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் ரூ. 50 முதல் 80 வரையும் உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு சில புத்தகங்கள் ரூ.90 வரை உயர்த்தப்பட்டுள்ளன.

காகிதங்களின் விலை உயர்வு, அச்சடிப்பதற்கான கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 5 ஆண்டு களுக்கு பின்பு விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.

இதன்படி 1-ஆம் வகுப்பு  புத்தகங்கள் ரூ. 160 உயர்ந்து, ரூ. 550-க்கும், 2-ஆம் வகுப்பு புத்தகங்கள் ரூ. 150 உயர்ந்து ரூ. 530-க்கும், 3-ஆம் வகுப்பு புத்தகங்கள் ரூ. 190 உயர்ந்து ரூ. 620-க்கும்,   4ஆம் வகுப்பு புத்தகங்கள் ரூ. 180 உயர்ந்து ரூ.650-க்கும், 5- ஆம் வகுப்பு புத்த கங்கள் ரூ. 200 உயர்ந்து ரூ. 710-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

இதேபோல 6-ஆம் வகுப்பு புத்தகங்கள் ரூ. 320 உயர்ந்து ரூ. 1,110-க்கும், 7-ஆம் வகுப்பு புத்தகங்கள் ரூ. 340 உயர்ந்து ரூ. 1,200-க்கும், 8-ஆம் வகுப்பு புத்த கங்கள் ரூ. 310 உயர்ந்து ரூ. 1,000-க்கும், 9-ஆம் வகுப்பு  புத்தகங்கள் ரூ. 340 உயர்ந்து  ரூ. 1,110-க்கும், 10-ஆம் வகுப்பு புத்தகங்கள் ரூ. 340 உயர்ந்து ரூ.1,130-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.