tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

குடும்ப உறவுகள், மகிழ்ச்சிக்கு  தடையாக ஸ்மார்ட்போன்கள்

சென்னை,டிச. 17-    இன்றைய நவீன யுகத்தில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஸ்மார்ட்போன்கள் இன்றியமை யாத ஒன்றாக மாறிவிட்டன.  

மனித உறவுகளில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தொழில்நுட்பத்தை மிகவும் கவனமுடன் கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விவோ நிறுவனம் தனது ‘சுவிட்ச்ஆப்’ பிரச்சாரத்தை 6வது ஆண்டாக வெளியிட்டுள்ளது. இது குடும்பங்கள் தங்கள் ஸ்மார்ட் போன் பயன்பாட்டிலிருந்து சற்று விலகி, அனைவரும் ஒன்றுகூடி பேசி மகிழ்ந்து உற்சாகமாக இருக்குமாறு வலியுறுத்துகிறது.  6வது பதிப்பான இது, ”பெற்றோர்-குழந்தை உறவுகளில் ஸ்மார்ட்போன்களின் தாக்கம் 2024”என்னும் விவோ – சைபர்  மீடியா ஆய்வு நிறுவனம் மேற் கொண்ட ஆய்வின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 10ல் 8 குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று விரும்பு கின்றனர். 69 விழுக்காடு குழந்தைகள் அதிகப்படியான ஸ்மார்ட்போன் உபயோகம் தங்களுக்கும் தங்கள் பெற்றோருக்கும் இடையேயான மோதலுக்கு ஆதாரமாக இருப்ப தாக கூறியுள்ளனர்.

மாநாட்டு பிரச்சார பணிகள் தீவிரம்!    

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டை விளக்கும் வகையில் கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் கலைவடிவில் பிரச்சாரம் செய்ய மாநாட்டு வரவேற்பு குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதில் இருந்தும் 6 கலைக்குழுக்கள் விழுப்புரம் மாவட்டத்தில் களம் இறங்குகின்றன. சுமார் 20 நாட்கள் இந்த கலைக்குழுவினர் நாடகம், கிராமியப் பாடல்கள் மூலம் சிபிஎம் சாதனைகளை பிரச்சாரம் செய்கின்றனர். இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.      

செந்தொண்டர் அணிவகுப்பு            

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டையொட்டி விழுப்புரம் ஜனவரி 3 ஆம் தேதி நகரில் பிரமாண்ட பேரணி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் செந்தொண்டர் அணிவகுப்பும் நடைபெறுகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செந்தொண்டர்கள் சிவப்பு உடை அணிந்து செங்கொடியுடன் அணிவகுப்பு நடத்துகிறார்கள். இதில் கலந்து கொள்ளும் செந்தொண்டர்களுக்கு பயிற்சி வகுப்பும் நடந்து வருகிறது.