நுகர்வோரை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும்
மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநாடு கோரிக்கை
சென்னை, மே 10 - நுகர்வோரை பாதிக்கும், இலவச மின்சாரத்தை பறிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மின்சார ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மத்திய சென்னை திட்டத்தின் 17வது மாநாடு சனிக்கிழமையன்று (மே 10) சிந்தாதரிப்பேட்டையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், 40 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ஆரம்பநிலை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 1.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளங்கண்டு மின்வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும், முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள அநீதிகளை களைந்து புதிய ஒப்பந்த உருவாக்க வேண்டும், வசூல் மையங்களில் உள்ள இணைய சேவை குறைபாட்டை சரி செய்ய வேண்டும், மருத்துவக் காப்பீடு திட்டத்தை வாரியமே ஏற்று நடத்த வேண்டும், கிராஜூவிட்டி தொகையை 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டும், குடும்ப நல நிதியை முன்தேதியிட்டு அமல்படுத்த வேண்டும், பகுதி நேர ஊழியர்களை முழுநேர ஊழியர்களாக மாற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு திட்டத் தலைவர் வி.சீனி வாசன் தலைமை தாங்கினார். மே தின பூங்கா அருகிலிருந்து பேரணியை மாநிலப் பொருளாளர் கே.வெங்கடேசன் தொடங்கி வைத்தார். மாநாட்டு கொடியை துணைத்தலைவர் கே.எம்.எம்.அப்துல் காதர் ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கி ணைப்பாளர் என்.கவுரி வாசித்தார். இணைச் செயலாளர் ஜெ.புண்ணியகோட்டி வர வேற்றார். சிஐடியு மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை தொடங்கி வைத்தார். வேலை அறிக்கையை திட்டச் செய லாளர் எஸ்.கண்ணனும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் எஸ்.முருக வேலுவும் சமர்ப்பித்தனர். சென்னை மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம், மாநில துணைத்தலைவர் எம்.தயாளன், உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் இ.விஜயலட்சுமி, திட்டச் செயலாளர்கள் டி.சந்திரசேகர் (சென்னை வடக்கு), எஸ்.குமார் (தென்சென்னை-1), இ.ஹெலன் தேவ கிருபை (தென்சென்னை-2), ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் செயலாளர் எஸ்.சுந்தர்ராஜன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். மாநில துணைத்தலைவர் ஆர்.குருவேல் நிறைவுரையாற்றினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பரந்தாமன் நன்றி கூறினார். நிர்வாகிகள் திட்டத் தலைவராக வி.சீனிவாசன், செயலாளராக கே.பரந்தாமன், பொரு ளாளர்hக என்.கவுரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.