சென்னை, டிச,7-
சென்னையில் நடைபெற்ற இந்திய இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் (ஐஏஜிஇஎஸ்) பயிலரங்கில் மருத்துவ கல்வியை புரட்சிகரமாக்கும் மிகோடோ கோலன் சிமுலேட்டர் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது.
இது வயிறு குடல் இரைப்பை பாதிப்பு களை கண்டறிய உதவும் சாதனமாகும் என்று சங்கத்தின் தலைவர் டாக்டர் சுபாஷ் அகர்வால் கூறினார். இந்த சாதனத்தின் உதவியுடன் கூடிய மருத்துவ பயிற்சிஅளிக்கப்பட்டு வருகிறது.
நவீன என்டோஸ்கோபி சாதனங்களால் இன்று புற்றுநோய் உள்பட பல கொடிய நோய்கள் துவக்க நிலையிலேயே கண்ட றியப்படுகிறது. குடலில் ரத்தக் கசிவு, ஆசனவாயில் ரத்தம் ஆகிய பாதிப்புகள் எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து உரிய சிகிச்சைக்கு பரிந்துரைக்க இந்த சாதனங்கள் பயன்படுகின்றன. இதில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மிகோடோ கோலன் சாதனம் செயற்கை நுண்ணறிவு மற்றும் சென்சார்களை ஒருங்கிணைக்கிறது.
இரைப்பை குடல் மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க இந்த சாதனம் பெரிதும் உதவுகிறது. சிமுலேட்டர் அடிப்படையில் செயல்படுவதால் துல்லியமாக மருத்து வர்கள் கற்றுக்கொள்ளமுடியும் என்று அகர்வால் கூறினார்.
முன்னதாக எண்டோஸ்கோபி மருத்துவத்தில் புகழ்பெற்ற மூத்த மருத்துவ பேராசிரியர் டாக்டர் பி.கிருஷ்ணாராவ் உருவகப்படுத்துதல் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி, டாக்டர் சதீஷ்மிஸ்ரா, டாக்டர் கோவிந்தராஜ் உள்படபலர் கலந்துகொண்டு பயிற்சியளித்தனர்.