“உத்தரப்பிரதேசத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாளரின் காலடி மண்ணைக் கவரவேண்டும் என்றுதான் ஒருவர் காலடியில் ஒருவர் செத்திருக்கிறார்கள். இருதயக்கூடு நொறுங்குகிறது, மது போதைக்கும் மத போதைக்கும் உள்ளது, பூவுக்கும் புஷ்பத்துக்கும் உள்ள வேறுபாடுதான். கல்வி, பொருளாதாரம், பகுத்தறிவு என்ற மூன்றிலும் மேம்படாத தேசம் இப்படித்தான் தவணை முறையில் இறந்துகொண்டிருக்கும் ‘இருப்பவர்கள் கண்களை இறப்பவர்கள் திறக்கிறார்கள்’ என்றோர் முதுமொழி உண்டு. இறந்தவர்கள் இருப்பவர்களுக்குப் பாடமாகிறார்கள். படிப்போமா?” என்று கவிஞர் வைரமுத்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.