tamilnadu

img

தனியார் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்.... விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்... அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி.....

சென்னை:
தனியார் பள்ளியில் பாலியல் புகார் எழுந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மீது, முன்னாள், இந்நாள் மாணவிகள் பலர் பாலியல் புகார் அளித்துள்ளது குறித்து தகவல் வந்தது. இது தொடர்பாக உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புகாருக்கான விளக்கத்தை சிஇஓ மூலமாக பள்ளிக் கல்வித்துறை கேட்டுள்ளது. கமிட்டி அமைத்து விசாரணை நடத்தப்படும் எனப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இதே மாதிரியான புகார்கள் வந்தி
ருந்தால், உரிய ஆதாரங்கள் இருந்தால் நிச்சயம்உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 கனிமொழி எம்.பி.,
திமுக எம்.பி. கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவர்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதைக் கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை சம்பந்தப்பட்டஅதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்’’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாலியல் புகார் எழுந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

;