tamilnadu

img

மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு : பொறுப்பாளராக ஆசிரியைகளை மட்டுமே நியமிக்கத் தமிழக அரசு உத்தரவு

மாணவிகளுக்குக் குழந்தைத் திருமணம், பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆசிரியைகளைப் பொறுப்பாளராக நியமிக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தர
விடப்பட்டுள்ளது. 

பள்ளிகளில் பயிலும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவிகளுக்குக் குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு குறித்த விவரங்களைத் தெளிவுப
டுத்த வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

பள்ளிகளில் ஒவ்வொரு 10 மாணவிகளுக்கும், ஒரு ஆசிரியை நியமிக்கப்பட்டு, விழிப்புணர்வைக் கொடுக்க வேண்டும். மாணவிகளுக்கு ஆண் ஆசிரியர்களைப் பொறுப்பாளராக நியமனம் செய்யக் கூடாது. மேலும், நியமனம் செய்யப்பட்ட விவரங்களை karurc3ceo@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறும், தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்ட பிரதியை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் பள்ளிக் கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 

;