tamilnadu

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ. 200 கோடி

சென்னை, ஜூலை 4- தமிழக சட்டப்பேரவையில் மின்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. பின்னர் பதில் அளித்த துறை அமைச்சர் தங்கமணி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, வட சென்னை அனல் மின் நிலையம், 1, 2 அலகு களுக்கான நீர்தேவையின் ஒரு பகுதியை பூர்த்தி செய்ய 2வது நிலையத்தில் ஒரு நாளைக்கு 10 மில்லியன் லிட்டர் நிறுவு திறன்  கொண்ட கடல் நீரை குடிநீராக்கும்  திட்டம் ரூ. 200 கோடியில் அமைக்க முதற்கட்டமாக ஒரு ஆய்வு பணி மேற்கொள்ளப்படும் என்றார். கிளன்மார்கனில் உலக தரம்  வாய்ந்த ‘புனல், மரபுசார எரிசக்தி  ஆராய்ச்சி மையம்’ நிறுவப்படும். இந்த மையத்திற்கு தொடக்க பங்களிப்பாக ரூ. 50 லட்சம் வழங்க தமிழ்நாடு மின் உற்பத்தி  மற்றும் பகிர்மானக் கழகம் உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

டாஸ்மாக் ஊழியர்கள் ஊதிய உயர்வு
தமிழ்நாடு மாநில வாணிபக்  கழகத்தில் 26,056 சில்லறை விற்பனையாளர்கள் தொகுப்பூ திய அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். அதேபோல் அரசு மதுபானக் கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்ப னையாளர்கள், உதவி விற்ப னையாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மாதம் ரூ. 2000 உயர்த்தி வழங்கப் படும். இந்த உயர்வு ஏப்ரல் 2019 முதல் அமல்படுத்தப்படும். இதன் மூலம் 7,074 மேற்பார்வை யாளர்களும், 15,435 விற்பனை யாளர்களும், 3,547 உதவி விற் பனையார்களும் பயன்பெறு வார்கள் என்றும் அமைச்சர் தெரி வித்தார்.