சென்னை, செப். 6- ‘அறிவியல் வழியே முன்னேற்றத் துக்கான வழி’ என முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக மாணவ - மாணவி யருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அரசுப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றவர் மூட நம்பிக்கைக் கருத்துக்களை பரப்பும் வகையில் பேசியது, தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின், தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
மாணவச் செல்வங்கள் அறிந்து கொள்ளத் தேவையான சிறந்த அறி வியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.
எதிர்காலச் சவால்களை, தன்னம் பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக் கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை - தக்க துறைசார் வல்லு நர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததி யினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறி வியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளி களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரை முறைப்படுத்து வதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணை யிட்டுள்ளேன்.
தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்து கள்தான் மாணவர்களின் நெஞ்சங் களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்ன தத்தையும் - அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன். அறிவியல் வழியே முன்னேற்றத்துக் கான வழி!.
இவ்வாறு முதல்வர் கூறியுள் ளார்.