சென்னை, ஏப். 29- சென்னையில் டீசல் பயன்பாட்டில் இருந்து இயற்கை எரிவாயு (கேஸ்) மூலம் அரசு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து துறையை பொறுத்தவரை சென்னை, விழுப்புரம், கும்ப கோணம், சேலம், கோவை உள்ளிட்ட 8 போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வரு கின்றன. அதன்படி, தமிழகம் முழுவதும் தின சரி 9,452 பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது.
இந்த பேருந்துகளுக்கான டீசல் செல வினம் என்பது தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. ஏற்கனவே, டீசல் பயன்பாட்டிற்கு பதி லாக அரசு பேருந்துகளை மின்சார பேருந்து களாகவோ அல்லது இயற்கை எரிவாயு பயன்படுத்தி இயக்கும் பேருந்துகளாகவோ மாற்ற போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டு அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வந்தன. குறிப்பாக, டீசலுக்கு பதிலாக இயற்கை வாயுவை (கேஸ்) பயன்படுத்தி இயக்கினால் மைலேஜ் கூடுதலாக கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக நடத்தப்பட்ட ஆய்வின் படி வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்து களை இயற்கை எரிவாயுவிற்கு மாற்ற போக்குவரத்து கழகங்கள் மூலம் முடிவு செய்யப்பட்டன.
அதனடிப்படையில் சென்னை மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் ஒரு இயற்கை எரிவாயு பேருந்துகளை அறி முகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இது நல்ல வரவேற்பை பெற்றால் தொடர்ந்து அனைத்து பேருந்துகளை இயற்கை எரிவாயு பயன்பாட்டிற்கு மாற்ற திட்டம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதி காரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் டீசலுக்கு மாற்றாக அரசு பேருந்துகளை இயக்க பல்வேறு ஆலோ சனைகளை செய்துவந்தோம். அதன்படி, மைலேஜ் அதிகரிக்கவும், காற்று மாசடை வதை தடுக்கவும் இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம். இதனை செயல்படுத்த பரிசோதனை முறை யில் பேருந்துகளை இயக்க அரசின் ஒப்பு தலை கேட்டு இருக்கிறோம். அதன்படி அனு மதி கிடைத்தவுடன் உடனடியாக இயற்கை எரிவாயு கொண்டு பேருந்துகளை இயக்கு வோம் என்றனர்.
தமிழகத்தில் இருக்கும் அனைத்து பேருந்துகளையும் தர சோதனை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தர விட்டுள்ள நிலையில் தற்போது அறி முகப்படுத்தப்பட உள்ள திரவ இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் அரசு பேருந்துகள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு போக்குவரத்து கழகம் ஏற்கனவே மின்சார பேருந்துகள், மாற்றுத் திறனாளிகளுக்கான தாழ்தள பேருந்துகள் வாங்க திட்டமிட்டுள்ள நிலையில், இந்த வரிசையில் தற்போது இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளும் இணைய உள்ளது.