tamilnadu

img

வரும் கல்வியாண்டில் சனிக்கிழமையும் பள்ளி விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை  

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  

இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவித்தார்.  

இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக வகுப்புகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்ததால், பள்ளிகள் கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டு வாரத்தில் 6 நாட்களும் செயல்பட்டன.  

ஆனால் வருகிற 2023 ஆம் கல்வியாண்டை பொறுத்தவரை, பள்ளிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும் என்றும், பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய தேவை இருந்தால் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். 

;