tamilnadu

img

ரூ.3 ஆயிரம் கோடிக்கு அரசு பத்திரங்கள் விற்பனை... தமிழக அரசு அறிவிப்பு....

சென்னை:
25 மற்றும் 30 ஆண்டு கால அளவுக்கான தலா1500 கோடி ரூபாய்க்கான பத்திரங்களை ஏல முறையில் விற்பனை செய்வதற்கான அறிவிப்பை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது.இதற்கான விண்ணப்பம் மத்திய ரிசர்வ் வங்கியின் ஈ-குபேர் ஏல விற்பனை இணையதளத்தில் ஜூன் 1 அன்று வெளியிடப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற அரசு பத்திரங்கள் இதற்கு முன்னர்வெளியிடப்பட்டிருந்தாலும் தற்போதுள்ள சூழலில் தனியார் முதலீடுகளை விட அரசு பத்திரங்களில் முதலீடு செய்வது ஆபத்து இல்லாதது என்பதால் இது நல்ல பலன் தரும் முயற்சி என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாட்டின் பொருளாதார நிலையை சீரமைக்க நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மேற்கொண்டு வரும் முயற்சிகளை பல்வேறுதரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

;