சென்னை, மார்ச் 11- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள அனைவ ருக்கும் முழுமையாக வேலை கிடைக்கும் வகையிலான மண் சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் தலை வர்கள், ஊரக வளர்ச்சித்துறை செயலாளரை நேரில் சந்தித்து மனு அளித்து முறையிட்டனர்.
சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்.எல்.ஏ, மாநி லப் பொதுச்செயலாளர் வீ.அமிர்த லிங்கம், மாநிலப் பொருளாளர் ஏ. பழநிசாமி, தர்மபுரி மாவட்டச் செய லாளர் எம்.முத்து ஆகியோர் ஊரக வளர்ச்சித்துறை செயலாளரை சந் தித்தனர்.
அப்போது ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் கூறுகையில், தமிழ்நாட்டு திட்டத்திற்கு நடப்பு ஆண்டிற்கு 20 கோடி மனித சக்தி நாட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை 41 கோடி மனித சக்தி நாட்கள் வேலை வழங்கப் பட்டுள்ளது. அதனால் ஊதிய பாக்கி நிலுவையில் உள்ளது. இந்த நிதியை பெறுவதற்கு சம்ப ளப்பாக்கியை பெறுவதற்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வரு கிறோம். முதலமைச்சரின் கவ னத்திற்கு கொண்டு சென்று ஒன் றிய அரசையும், ஒன்றிய ஊரக வளர்ச்சி துறையையும் வலியுறுத்தி சம்பள பாக்கியை விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப் படும். ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு தொடர்ச்சியாக அனைவருக்கும் முழுமையாக வேலைவழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என்று தெரி வித்தார்..
விவசாயத்தொழிலாளர் சங்கம் சார்பில் அளித்த மனு வருமாறு:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் 2005 ஆம் ஆண்டு முதல் சுமார் 20 ஆண்டுகளாக நம் நாட்டில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. சட்ட அந் தஸ்துடன் கூடிய இத்திட்டத்தின் விதிகளில் திருத்தம்-மாற் றம் நாடா ளுமன்ற விவாதத்திற்கு பிறகே செய்திட வேண்டும் என்பது விதியா கும்.
ஆனால் 2014 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய பாஜக ஆட்சி காலத் தில் 10 ஆண்டுகளாக சட்ட விதி களை மதிக்காமல் தானடித்த மூப் பாக திட்டத்தை சிதைத்தும் நிதி ஒதுக்கீட்டை குறைத்தும் அமலாக் கம் செய்வதால் கிராமப்புற விவ சாயத் தொழிலாளர்கள் சிறு-குறு விவசாயிகளுக்கு உரிய கூலியும் வேலையும் கிடைக்காத நிலை ஏற் பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு சார்பில் இத் திட்டத்திற்கான மாநில பங்களிப்புத் தொகை கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து உயர்த்தப்பட்டு வழங்கு வது பாராட்டத்தக்கது. தற்போ தைய வழிகாட்டுதல்படி கட்டிட, கட்டுமானப் பணிகளை அதிக அள வில் மேற்கொள்வதால் 05 முதல் 20 பேர் வரையிலான எண்ணிக்கை யில் மட்டுமே வேலை கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் இத் திட்டத்திற்கான மாநில பங்களிப்புத் தொகை கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து உயர்த்தப்பட்டு வழங்கு வது பாராட்டத்தக்கது. தற்போ தைய வழிகாட்டுதல்படி கட்டிட, கட்டுமானப் பணிகளை அதிக அள வில் மேற்கொள்வதால் 05 முதல் 20 பேர் வரையிலான எண்ணிக்கை யில் மட்டுமே வேலை கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
இந்திய நாடு முழுவதும் திட் டத்தில் வேலை, கூலி வழங்கும் நடைமுறையில் பின்னடைவு இருந்தபோதும், தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. மேற்கண்ட ஒன்றிய அரசின் வழிகாட்டு உத்தரவை தமிழக அரசு அமலாக்கம் செய்தால் தமி ழகத்தில் பெரும்பாலான தொழிலா ளர்கள் வேலை இழக்க நேரிடும்.
இதன் காரணமாக கிராமப்புற பொருளாதாரம் நலிவடையும். மேலும் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தொழிலாளர்களுடைய வேலை இழப்பு, தமிழக அர சுக்கு எதிராக பாதிப்பை ஏற்படுத் தும். வேலை அமலாக்கம் தொடர் பாக பெரும்பாலான தொழிலா ளர்களுக்கு வேலை வழங்குவ தற்கான நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
ஆகவே, தாங்கள் தலையிட்டு வேலை அட்டை பெற்றுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தொடர்ச்சியாக வேலை வழங்கும் வகையில் தற்போதைய ஒன்றிய அரசின் புதிய வழிகாட்டு உத்தரவு களை திரும்பப் பெறவும் திட்டத் தின் பயனாளிகள் வேலை செய்து இரண்டு மாதம் முதல் நான்கு மாதம் வரை ஊதியம் வழங்காமல் இருக்கும் நிலுவையை ஒன்றிய அரசை வலியுறுத்தி பெற்றிடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த மனுவின் நகல் முதல மைச்சர், ஊரக வளர்ச்சி துறை இயக்குநர், ஊரக வேலைத்திட்ட உதவி இயக்குநர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.