tamilnadu

img

கிராமசபை கூட்டத்தை வார நாட்களில் நடத்தக்கோரி காலவரையற்ற வேலைநிறுத்தம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் முடிவு

கிராமசபை கூட்டத்தை வார நாட்களில் நடத்தக்கோரி காலவரையற்ற வேலைநிறுத்தம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் முடிவு

விழுப்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் வரும் ஏப்ரல் 23 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் சீ. காந்திமதிநாதன் தலைமை யில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.பிரபு வேலை அறிக்கையையும் பொருளாளர் மா.விஜயபாஸ்கர்  வரவு-செலவு அறிக்கை யியையும்  சமர்ப்பித்தனர். கூட்டத்தில் மார்ச் 23அன்று (ஞாயிறு) நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தை வேறொரு வேலை நாளில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வரும்18-ந்தேதி அனைத்து வட்டாரக் கிளைகளிலும் மாலை ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்வதென முடிவு செய்தனர். மார்ச் 20ல் சென்னையில் ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறை ஆணையரிடம் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் பெருந்திரள் முறையீடு இயக்கத்தை நடத்துவது, மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் மானிய கோரிக்கை தொடர்பாக பேச உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை சென்னையில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்துவது.‘ ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் மற்றும் நிர்வாக நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23- ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச் செய லாளர் கு.மகாலிங்கம், மாநில துணைத்தலை வர்  கு.சரவணன்,மாநிலத் துணைத் தலை வர்கள் மு.வீரகடம்ப கோபு, ச.இளங்  குமரன், வளர்மாலா, மாநில செய லாளர்கள் அ.பாலாஜி செந்தில்குமார், த.கொலஞ்சிவேலு கே.எஸ்.செந்தில், பழனி,மாநில தணிக்கையாளர் அ.அன்பு செல்வன்,விழுப்புரம் மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் மாவட்ட செயலாளர் ரமேஷ் மாவட்ட பொருளாளர் தண்டபாணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.