tamilnadu

img

ரூ.2 ஆயிரம் நிவாரணம்: திட்டத்தை முதல்வர் நாளை துவக்கி வைக்கிறார்....

சென்னை:
தமிழ்நாட்டில் அரிசி பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண 2000 ரூபாய் வழங்குவதற்கு பத்தாம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,”தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க. ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில், முதல் கட்டமாக ரூபாய் 2000 நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் சென்னையில் வரும்  10 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்” என்றார்.அதனைத் தொடர்ந்து, ஒவ் வொரு மாவட்டத்திலும் அமைச் சர்களால் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்படும். இதன் படி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு திங்கட்கிழமை முதல் ரூ. 2,000 வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அரிசி அட்டை வைத்துள்ள சுமார் 2.07 கோடி பேருக்கு இந்தத் திட்டம் அமலுக்கு வரும். இதற்கான டோக்கன்கள் ரேசன் கடை விற்பனையாளர் மூலம் வீடு வீடாகச் சென்று வழங்கப்படும். அட்டைதாரரின் குடும்பத்தில் யார் வேண்டுமானாலும் ரேசன் கடைக்குச் சென்று பணத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் கூறினார்.தினந்தோறும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்தப் பணம் வழங்கப்படும். ஒரு நாளைக்கு 200 அட்டைதாரர்களுக்கு இந்த பணம் வழங்கப் பட உள்ளது. முதலிலேயே வழங்கப்படும் டோக்கனில் பணத்தைச் சென்று பெற்றுக் கொள்ள வேண்டிய தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப் பட்டிருக்கும்.அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் பணம் முறையாகச் சென்று சேரும். அதைக் கண்காணிக்கும் முழுப் பொறுப்பு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற் கெனத் துணை வட்டாட்சியர், பிடிஓ தலைமையில் தனிக் குழுவும் விரைவில் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

;