tamilnadu

img

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.10லட்சம் நிதி – தமிழக முதலமைச்சர்

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

சென்னை – தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 18 ஆம் தேதி சுகந்தன், சேவியர் மற்றும் ராஜ்கிரண் ஆகிய 3 பேரும் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். மூவரும் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டதாகவும், மீனவர்கள் சென்ற விசைப்படகு, கடலில் மூழ்கியதாகவும் தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து அவர்கனை மீட்டுத் தருமாறு தமிழக முதலமைச்சர், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.  இதில் சுகந்தன், சேவியர் ஆகிய இருவரும் இலங்கையின் கடற்படை வசம் இருந்த நிலையில் மற்றொரு மீனவரான ராஜ்கிரண் உயிரிழந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்தது.  

இந்நிலையில் உயிரிழந்த ராஜ்கிரண் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

;