tamilnadu

img

அரசு மருத்துவமனைகளில் ரோபோடிக் முறை

 சென்னை,ஆக.21- அரசு மருத்துவமனைகளில் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையை கொண்டு வர தமிழக அரசு முயற்சி செய்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனையின் அதிநவீன நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். நரம்பியல் அறுவை சிகிச்சைகளில் உதவக் கூடிய உலகின் அதிநவீன 4 கே, 3டி மற்றும் ரோபோடிக் விஷூவலைசேஷன் தொழில்நுட்பம் ஆகியவை இதில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர், “இன்றைய கால கட்டத்தில் சிகிச்சைகளின் துல்லியத்தை அறிய ரோபாடிக் போன்ற தொழில்நுட்பங்களின் தேவை உள்ளது. அந்த வகையில் நரம்பியல் அறுவை சிகிச்சைக்கு இது போன்ற ரோபோடிக் கருவி பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது” என்றார். முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை முறையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.