tamilnadu

img

காட்பாடியில் இரண்டு இடங்களில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

காட்பாடியில் இரண்டு இடங்களில்  குடிநீர் கேட்டு சாலை மறியல்

வேலூர் ஜூன் 13 - வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் கிளித்தான்பட்டறையில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இந்த பகுதியில் கடந்த பல மாதங்க ளாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் குடிநீர் வழங்கும் மாநகராட்சி ஊழியரிடம் அப்பகுதி மக்கள் கேட்டதற்கு மாதம் தோறும் ஒரு குடும்பத்திற்கு ரூ. 200 வழங்கினால் மட்டுமே தண்ணீர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் வெளியில் பணம் கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வந்தனர். குடிநீர் வழங்காதது குறித்து மாமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி அதி காரிகளிடம் பலமுறை புகார் தெரி வித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் கோபமடைந்த அப்பகுதி பெண்கள் வெள்ளியன்று (ஜூன் 13) காலி குடங்களுடன் காட்பாடி - குடியாத்தம் சாலையில்  மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக சாலையின் இரு பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சாலை மறியல் குறித்து தகவ லறிந்த காட்பாடி டிஎஸ்பி பழனி மற்றும் காவல்துறையினர், மாநகராட்சி 1-வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வ தாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.  இத்தகவலறிந்த பட்டறை, பெரிய பட்டறையை சேர்ந்த பொதுமக்களும் குடிநீர் கேட்டு மீண்டும் காட்பாடி - குடி யாத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்ட னர்.  அடுத்தடுத்து நடைபெற்ற இரு சாலை மறியலால் சுமார் 1 மணி நேரம் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.