tamilnadu

ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷ் ஆஜர்

சென்னை,டிச.12- ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகரும் பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ், சென்னையில் உள்ள மாநில பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.

வேலூரை தலைமையிடமாக கொண்ட ஆருத்ரா நிதி நிறுவனம், சென்னை, திரு வண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதி களில் கிளைகளை கொண்டிருந்தது. இந் நிறுவனம், அதிக வட்டி தருவதாக கூறி மக்களை ஏமாற்றியது.

இந்த நிறுவனத்தின் கவர்ச்சிகரமான அறிவிப்பால் மயங்கிய அப்பாவி மக்கள், ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு  செய்தனர். ஆனால், ஆருத்ரா நிறுவனம்,  வட்டியும் வழங்காமல், அசலும் வழங்கா மல் மோசடி செய்தது அம்பலமானது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொரு ளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு பொரு ளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்நிறுவன உரிமையாளர் ராஜசேகர் மற்றும், இந்நிறுவனத்தில் கோடிக்கணக்கில் பணம் வாங்கி விட்டு, அதை முறையாக கட்டாத திரைப்பட நடிகர் ஆர்.கே.சுரேஷ் உள்பட சிலர் தலைமறைவாகினர். இவர் கள் துபாயில் இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.

நடிகர் ஆர்.கே.சுரேஷ், காவல்துறை விசா ரணைக்கு ஆஜராகுமாறு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை பலமுறை சம்மன் அனுப்பினர். ஆனால், ஆஜராகாத நிலையில், அவரது வங்கிக் கணக்கு மற்றும் சொத்துக்களை முடக்கி நடவடிக்கை  எடுக்கப்பட்டது.

மேலும், ஆர்.கே.சுரேஷூக்கு எதிராக லுக்அவுட் நோட்டீசும் அனுப்பட்டது. இதை எதிர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைக்கப்பட்டது. வழக்கின் விசார ணையின் போது, ஆர்.கே.சுரேஷ் தரப்பில், நீதிமன்றத்தில் ஆஜராவதில் உறுதி அளிக்கப்பட்டது.

இரண்டு நாட்களுக்கு முன் துபாயில் இருந்து சென்னை வந்த நடிகர் ஆர்.கே  சுரேஷ் விமான நிலையத்தில் வைத்து குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தி னர். அப்போது நீதிமன்ற உத்தரவின்படி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை யிடம் ஆஜராக வந்திருப்பதாக அவர்களி டம் ஆர்.கே. சுரேஷ் தெரிவித்தார். பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல குடியுரிமை அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.

இந்த நிலையில், தற்போது மாநில பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி  உள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.