tamilnadu

img

கட்டுப்பாடுகளை மீறினால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்... முதல்வர் ...

 சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோவில் பேசி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர்  பேசியிருப்பதாவது:-

மக்கள் நலனை காக்கும் இந்த அரசு தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா என்ற பெருந்தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது.தமிழகத்தில் அதிகபட்சமாக ஒருநாளைக்கு தொற்றால் பாதிக்கப்படுகிறவர்கள் 36 ஆயிரமாக இருந்தனர். இது 50 ஆயிரமாக உயரும் என்று மருத்துவர்கள் கூறினார் கள். ஆனால் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துகொண்டு வருகிறது.

ஒவ்வொரு நாளும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக விரைவாக குறைந்து கொண்டே வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் காலியாக இல்லை என்பது மாதிரியான நிலைமை இப்போது இல்லை.தற்போது கட்டணமில்லா அழைப்புகளுக்கு உதவி கேட்டு வரும் தொலைபேசிகளும் குறைந்துவிட்டது. தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வசதியை உங்களுக்கான இந்த அரசு உருவாக்கித் தருகிறது.தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக 2 வார காலத்தில் அனைத்தும் கட்டுக்குள் வந்துவிட்டது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் சங்கிலியை உடனே உடைத்தாக வேண்டும்.அதற்காகத்தான் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அறிவித்தோம்.ஊரடங்கு கட்டுப்பாட்டை மக்கள் முழுமையாக கடைபிடித்ததால் தான் இந்த அளவுக்கு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. எனவே விதிமுறைகளை பின்பற்றி நடந்து கொண்ட மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.ஊரடங்கை இன்னும் ஒரு வார காலத்துக்கு நீடித்து அறிவியுங்கள் என்று பொதுமக்களிடம் இருந்தே கோரிக்கைகள் வந்தன. அரசும், மக்களும் ஒரேமாதிரியாக சிந்திப்பது மட்டுமல்ல, மக்களின் எண்ணங்களை தான் அரசு செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவை இல்லை.அரசு என்னதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதை மக்கள் பின்பற்றினால் தான் வெற்றி சாத்தியமாகும். விதிகளை மக்கள் பின்பற்றுவதால் தான் தொற்று பரவல் குறைந்தது. அதேபோன்ற எச்சரிக்கை உணர் வோடு மக்கள் தொடர்ந்து இருக்க வேண்டும்.

கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது என்று தான் சொன்னேனே தவிர முழுமையாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று சொல்லவில்லை. மக்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அரசும் மக்களின் நெருக் கடியை உணர்ந்திருக்கிற காரணத்தால் தான் கொரோனா தொற்று குறைந்து வரும் மாவட்டங்களில் சில தளர்வுகளை கொடுத்து இருக்கிறோம். சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறோம்.இந்த தளர்வுகளுக்கான உண்மையான நோக்கத்தை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும். தளர்வுகள் கொடுத்துவிட்டார்கள் என்று அவசியமில்லாமல் வெளியே நடமாடக் கூடாது. தங்களுக்கு தாங்களே ஒவ் வொருவரும் சுய கட்டுப்பாட்டை விதித்துக்கொள்ள வேண்டும். நமக்கு நாமே தான் முதன்மையான பாதுகாப்பு. வணிகர்கள் விதிமுறைகளை பின்பற்றி தங்கள் வணிகத்தை செய்ய வேண்டும்.

தளர்வுகள் தருவது முக்கியமல்ல. அந்த தளர்வுகளுக்கான விதிமுறைகளை சரியாக பின்பற்றியாக வேண்டும். தேநீர் கடைகளில் கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். தனி மனித இடைவெளியை கடை பிடித்தாக வேண்டும். முடி திருத்தும் நிலையங்களிலும் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

டாஸ்மாக் திறப்பு ஏன்?
பல்வேறு விமர்சனங்கள் வரும் என்ற நிலையிலும் மது பானக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. போலி மது, கள்ள மது போன்ற தீமைகள் தமிழ் நாட்டை சீரழித்துவிடக்கூடாது என்பதில் இந்த அரசு கவனமாக இருக்கிறது. டாஸ்மாக் கடைகள் முழுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றி இயங்கும்.கொரோனா கால கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் எந்த நேரத்திலும் இந்த தளர்வுகள் திரும்ப பெறப்படும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக்கொள்கிறேன்.கட்டுப்பாட்டை மீறுகிறவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என் பதை உணர வேண்டும். காவல்துறை கண்காணிப்பு இல்லாமலேயே கட்டுப்பாடுகளை மதிக்கும் மக்களாக தமிழ்நாட்டு மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். அந்த விருப்பத்தை நமது மக்கள் நிச்சயமாக நிறைவேற்று வார்கள் என்கிற நம்பிக்கையும் எனக்கு நிரம்ப இருக்கிறது.முழு ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். பொது போக்குவரத்து சேவையை விரைவில் இயக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் திறக் கப்பட வேண்டும். இப்படி ஒவ் வொன்றாக செயல்படுத்த வேண்டும் என்றால் அதற்கு மக்கள் துணை அவசியம். தொற்று பரவலை தகர்க்கும் வல்லமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. மக்கள் சக்தியே உயர்ந்தது என்பதை விரைவில் நிரூபிப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.

;