அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 59இலிருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்
தற்போது தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக உள்ளது. இந்நிலையில் 110 விதியின் கீழ் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 2021 மே மாதம் 31-ஆம் தேதிக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஓய்வுபெறும் வயது வரம்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.