மழையை எதிர்கொள்ள புதுவை அரசு தயார்: முதல்வர்
புதுச்சேரி,அக்.30- வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது தொடர்பாக முதல மைச்சர் நாராயணசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, கமலக்கண்ணன், ஷாஜகான், மக்களவை உறுப்பினர்கள் வைத்தியலிங்கம், கோகுலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அருண் மற்றும் பொதுப்பணி, காவல், தீயணைப்பு துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் செயலர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர்,“ புதுச்சேரி யில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கினால் மக்களுக்கு ஆபத் தில்லாமல் பாதுகாப்பது, மின்தடை சீர்படுத்துதல், உணவு பொருட்கள் அளித்தல், மருத்துவசேவைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது” என்றார். வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் இரண்டு குழுக்கள் அமைத்து மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்காணிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 5 பகுதிகளாக பிரித்து முதலமைச்சருடன் அமைச்சர்களும் அந்தந்த பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வோம். மழைக் காலத்திற்கு தேவை யான அனைத்துவித நடவடிக்கை எடுக்கவும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக முதலமைச்சர் கூறினார்.
கடலூரில் தொடர் மழையால் மீன்பிடித் தொழில் பாதிப்பு
கடலூர், அக். 30- கடலூர் மாவட்டத்தில் 49 மீனவர் கிராமங்கள் உள்ளன. சுமார் 20 ஆயி ரம் பேர் இத்தொழிலில் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். இயந்திர படகு கள் 245, பைபர் படகுகள் 2,158 மற்றும் கட்டுமரங்கள் உள்பட 4500 படகு கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாவட்டத்தில் பெய்து வரும் பருவமழையால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பைபர் படகுகள், கட்டுமரங்களில் மீன்பிடிக்கச் செல்வோர் முந்தைய நாள் இரவில் புறப்பட்டுச் சென்று மறுநாள் அதிகாலையில் கரைக்குத் திரும்புவார்கள். தற்போது, மழை பெய்து வருவதாலும் கடலின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தா லும் அவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதுகுறித்து, மீன்வளத்துறை உதவி இயக்குநர் ரேணுகா கூறுகை யில், “தீபாவளி பண்டிகைக்காக ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் கரைக்குத் திரும்பியிருந்தனர். ஆனால், மீண்டும் கடலுக்குச் செல்லக் கூடிய சூழல் உருவாகாததால் அவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மற்ற மீனவர்களும் கடலின் தன்மையைப் பொறுத்து கடலுக்குச் செல்வதை தவிர்த்துள்ளார்கள்” என்றார். கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட கடல் பகுதிகளுக்கு எந்தவித மான முன்னெச்சரிக்கை அறிவிப்பும் விடப்படவில்லை. ஆனால், லட்சத் தீவு, அந்தமான், கன்னியாகுமரி பகுதிகளுக்கு கடலுக்குச் செல்ல வேண்டா மென மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இதுதொடர்பாக, 49 மீனவர் கிராம பிரமுகர்கள் இணைந்து தனியாக வாட்ஸ்அப் குழு உருவாக்கி அதன் மூலமாக தகவல்களை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார். தற்போது மழை பெய்துள்ளதால் தேவனாம்பட்டினம், கிள்ளை பகுதிகளில் ஆற்றின் முகத்துவாரத்தில் அதிக நீர் வரத்து இருக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளதோடு, மீன்வளத்துறை சார்பில் தனியாக அலுவ லர்களையும் நியமித்து கண்காணித்து வருகிறோம் என்றும் அதிகாரி தெரிவித்தார்.