tamilnadu

அரசுப் பள்ளி கட்டமைப்பு, கல்வித் தரத்தை உயர்த்த நிபுணர் குழு: உயர் நீதிமன்றம் உத்தரவு....

சென்னை:
அரசுப் பள்ளிகளில், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், உள்கட்டமைப்பினை மேம்படுத்தவும் நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பள விகிதம் நிர்ணயிக்க, தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பணிக் காலத்தையும் சேர்த்துக்கொள்ளக் கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழகக் கல்வித்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலகண் டன், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அடிப்படைக் கல்வித் தரத்தினை உயர்த்தவும் - அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தமிழக அரசு அனைத்து ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, அரசுப் பள்ளிகளில், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், உள்கட்டமைப்பினை மேம்படுத்தவும் நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அரசுப் பள்ளிகளை அருகிலுள்ள தொழில் நிறுவனங்கள் தத்தெடுத்து உள்கட்டமைப் பினை மேம்படுத்துவது குறித்தும் கல்வித் துறை கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி, இந்த வழக்கின் விசாரணையை எட்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

;