tamilnadu

img

வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்

வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்

சிதம்பரத்தில், வக்பு வாரிய சட்டதிருத் ததை திரும்பபெறு வலியுறுத்தி அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் வெள்ளியன்று (ஏப்.4) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்லாமியர்களுக்கு எதிரான வகுப்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஏப். 2அன்று  மக்களவையில் ஒன்றிய அரசு நிறைவேற்றி யது.  இதனை எதிர்த்தும் திரும்பபெற வலி யுறுத்தியும் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இதன்  ஒருபகுதியாக சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள லப்பை தெரு பள்ளி வாசல் முன்பு அனைத்து ஜமாத் கூட்ட மைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு லப்பை தெரு பள்ளிவாசல் தலைவர் முஹம்மது ஹலீம் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் மாநில துணைத்தலைவர் மூசா உள்ளிட்ட அனைத் துக் கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் ,ஜமாத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மோடி அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மேலும் அனைத்து இஸ்லாமிய மக்கள் மற்றும் அனைத்து கட்சியினரை ஒருங்கி ணைத்து மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்த னர்.