tamilnadu

img

நியாயவிலைக்கடைகளில் பொருட்களை பாக்கெட்டுகளில் வழங்கத் திட்டம்!

 தமிழ்நாடு நியாய விலைக்கடைகளில் பச்சரிசி,புழுங்கல் அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. பாமாயில் ஒரு பாக்கெட் ரூ.25க்கும், துவரம் பருப்பு ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருந்த போதும் நியாய விலைக்கடைகளில் சரியான அளவு எடையில் பொருட்கள் வழங்கப்படவில்லையென்றும். எடை அளவு குறைத்து மோசடி நடைபெறுவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நியாய விலைக்கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்களை வினியோகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நியாய விலைக்கடைகளில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சோதனை அடிப்படையில் 234 தொகுதிகளில் தலா ஒரு நியாய விலைக் கடைகளை தேர்வு செய்து பாக்கெட்டுகளில் பொருட்களை வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாகச் சேலத்தில் உள்ள ஒரு நியாய விலைக்கடைகளில் மட்டும் தற்போது பாக்கெட் மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.