tamilnadu

img

தனியார் பள்ளிகள் 85 சதவிகிதம் கட்டணம் வசூலிக்கலாம்  -சென்னை உயர்நீதிமன்றம்

கோவை மாவட்ட ஆட்சியரின் கண்ணியத்தை களங்கப்படுத்திய முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் அதிமுக எம்எல்ஏக்களுக்கும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரனை சந்தித்து மனு அளிக்க எஸ்பி வேலுமணி தலைமையில் சென்ற கோவை மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரை முற்றுகையிட்டு மிரட்டும் தொனியில் பேச்சு மொழியையும் உடல் மொழியையும் பிரயோகித்தமைக்கும் ஆட்சியரின் கண்ணியத்தை களங்கப்படுத்தும் வகையில் நடந்த கொண்டமைக்கும் கோவை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பாக கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
இனியும் இதுபோன்ற தவறான செயல்கள் நடக்காத வகையில் அரசுப்பணியாளர் எவ்வித அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் நேர்மையாக சட்ட விதிகளின் படி பணியாற்றவும் அரசு மேற்கொள்ளும் மக்கள் நலத்திட்டங்களை எந்த தடையுமின்றி செயலாற்ற தமிழக முதல்வர் வழிவகை செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

;