tamilnadu

img

குப்பை கிடங்கு அப்புறப்படுத்திய இடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் 

குப்பை கிடங்கு அப்புறப்படுத்திய இடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் 

குடியிருப்போர் நலச்சங்கம் வரவேற்பு

கம்மியம்பேட்டை குப்பை கிடங்கு அப்புறப்படுத்தப்பட்ட இடத்தில் சுகாதார நிலையம் அமைப்பதற்கு குடியிருப்போர் சங்கம் வரவேற்றுள்ளது. கடலூர் நகராட்சிக்குட்பட்ட கம்மியம் பேட்டை பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தி யில் 50 ஆண்டுகளுக்கு மேலாக குப்பை கிடங்கு இருந்தது. மாநகராட்சியால் சேக ரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இந்தப் பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. அதி லிருந்து துர்நாற்றம் வீசுவதோடு, மாநகர மக்களுக்கு பல்வேறு சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டன. இதையடுத்து, கடலூர் அனைத்து குடி யிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் குப்பைக் கிடங்கை அப்புறப்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதன் விளைவாக மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் குப்பை கிடங்கை அப்புறப்படுத் துவது என்று முடிவு செய்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த பணி நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து, குப்பை கிடங்கு அப்புறப்படுத்தப்பட்டது. அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் அரசு ஆரம்ப சுகா தார நிலையம் கட்டுவதற்கு 15ஆவது மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையாளர் அனு தலைமையில் நடைபெற்றது. மேயர் சுந்தரி ராஜா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் மாமன்ற உறுப்பினர்கள் சரவணன், சங்கீதா செந்தில் முருகன்,திமுக மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா, மாணவர் அணி  துணை அமைப்பாளர் பாலாஜி, கடலூர் அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் சிறப்பு தலைவர் எம்.மருதவாணன், பொரு ளாளர் பி.கே.ரமணி, துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், சிங்காரம், செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து குடியிருப்போர் சங்கத்தின் சிறப்பு தலைவர் மருதவாணன் கூறுகை யில், “குப்பை கிடங்கை அப்புறப்படுத்த குடி யிருப்போர் சங்கத்தின் சார்பில் பல கட்ட போராட்டங்களை நடத்தினோம். துறை அதிகாரிகளை சந்தித்து தொடர்ச்சியாக மனு அளித்து வலியுறுத்தினோம். அதனடிப்படை யில், குப்பைக் கிடங்கு அப்புறப்படுத் தப்பட்டது. அந்த இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதை குடியிருப் போர் சங்கம் சார்பில் வரவேற்கின் றோம்”என்றார்.