சென்னை, மே 13-சென்னை ஆர்.கே.நகர் பகுதி, தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள ஐ.ஓ.சி. யில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் மின்சாரம் இன்றி அப்பகுதி மக்கள் பெரும் இன்னல்களுக்குஆளாகியுள்ளனர். இது தொடர்பாக பொது மக்கள் சிலர்தண்டையார்பேட்டை பவர் ஹவுஸ் சென்று புகார் அளிக்க சென்றனர். அங்கு அதிகாரிகள் யாரும் இல்லை. இதேபோல், திருவொற்றியூரில் இரவுநேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. ஞாயிறன்று இரவு மின்தடை ஏற்பட்டது.சுமார் இரண்டு மணி நேரமாக மின்சாரம் இல்லாததால் டோல்கேட் முதல் தேரடி வரை உள்ள பகுதி மக்கள் அவதிப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் காலடிப்பேட்டை மின்சார அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.