சென்னை, மார்ச் 30 - மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதிமுகவுக்கு பம்பரம் கிடைக்காத நிலையில், தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விசிக-வை தவிர வேறு யாரும் பானைச் சின்னம் கேட்கவில்லை என் பதால், விசிக-விற்கே பானை சின்னம் வந்து சேர்ந்துள் ளது.
முன்னதாக சுயேச்சை ஒருவர் பானைச் சின்னம் கேட் டிருந்தார் என்ற நிலையில், பரிசீலனையின் போது அவ ரது மனு தள்ளுபடியாகி விட் டது. அதேபோல திருச்சி ராப்பள்ளி தொகுதியில், சுயேட்சை ஒருவர் தீப்பெ ட்டி சின்னத்தைக் கேட்டிருந் தாலும், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற முன்னு ரிமை அடிப்படையில் மதி முகவுக்கு தீப்பெட்டி சின்னம் வழங்கப்பட்டது.