tamilnadu

மீராபாய் சானுவை கவுரவிக்கும் தபால் துறை....

சென்னை:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்தியாவின் மீராபாய் சானுவுக்கு ரூ.10 செலவில் மின்னணு-தபால் மூலம் வாழ்த்துகள் அனுப்பி  கவுரவிக்க, ஒரு பிரத்தியேக மின்னணு- தபால் கவுண்ட்டர் வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் சமீபத்தில் திறக்கப்பட்டது.

நடக்கவிருக்கும் போட்டிகளுக்கு, இந்திய ஒலிம்பிக் குழுவினருக்கு, நாம் மின்னணு-தபால் மூலம் வாழ்த்துகள் தெரிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சிக்கு வேலூர் பிரிவு தபால் அலுவலகங்களின் கண்காணிப்பாளர் பி.கோமல்குமார் தலைமை தாங்கினார். கடந்த 2011ஆம் ஆண்டு ஜார்க்கண்ட்டில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியில் பளுதூக்கும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மற்றும் 2010ஆம் ஆண்டு உதய்பூரில் நடந்த சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற எம்.தமிழ்செல்வன் தொடங்கி வைத்தார். மேலும் மின்னணு - தபால் வசதியை பயன் படுத்தி, இந்தியர்களை பெருமைபட வைத்த இந்தியாவின் மீராபாய் சானுவுக்கு வாழ்த்துகள் அனுப்பும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார். இவர் தற்போது, தபால் துறையில் தபால்காரராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

;