tamilnadu

img

போலியோ சொட்டு மருந்து முகாம்... ஜன.31ல் நடைபெறும் என அறிவிப்பு....

சென்னை:
கொரோனா தடுப்பூசி பணிகளால் ஒத்திவைக்கப் பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 31 ஆம் தேதி நடைபெறுகிறது.5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை போலியோ நோய் தாக்காமல் இருப்பதற்காக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் அரசு சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் பணி காரணமாக இந்தாண்டு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக 
அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சுற்றறிக்கையில் தெரிவித் துள்ளது.இந்த நிலையில் வருகிற 31 ஆம் தேதி (ஞயிற்றுக் கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. இந்த முகாமில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அழைத்துச் சென்று சொட்டு மருந்து வழங்குமாறு பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

;