தமுஎச ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான கவிஞர் தணிகைச்செல்வன் புகழஞ்சலிக் கூட்டம் திங்களன்று (நவ.26) சென்னையில் நடைபெற்றது. தமுஎகச சென்னை மாவட்டக்குழுக்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் மூத்த தலைவர் வே.மீனாட்சிசுந்தரம், சிகரம் ச.செந்தில்நாதன், நாடகவியலாளர் பிரளயன், எஸ்.குமாரதாசன், கவிஞர் நா.வே.அருள், அசோக்சிங், மணிநாத், சி.எம்.குமார், மலர்விழி, ஐ.சரத்குமார் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.