tamilnadu

img

விவசாயிகளுக்கு ஆதரவாக உறுதிமொழி ஏற்பு...

விவசாயம், விவசாயிகள், நுகர்வோர் விரோத 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தில்லியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.

இதன்தொடர்ச்சியாக ஒருங்கிணைப்புக்குழுவின் அறைகூவலை ஏற்று ஜனவரி 1 வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு முழுவதும் ‘விவசாயிகளைக் காப்போம்; நாட்டைக் காப்போம், அம்பானி, அதானி பொருட்களைப் புறக்கணிப்போம்’’ என  உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் நடந்த நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன், ஒருங்கிணைப்புக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். தஞ்சையில் பி.செந்தில்குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சாமி. நடராஜன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;