சென்னை, ஜூன் 17- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடை பெற்ற கூட்டத்தில், அமைச்சர் கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி. ஜெயக்குமார், செங்கோட்டை யன், உதயகுமார், பெரியகருப்பன், அன்பழகன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங் கள் மீது அபராதம் விதிக்கப்படுவது பற்றியும், அவற்றை தொடர்ந்து பயன் படுத்தும் நிறுவனங்களின் உரி மத்தை ரத்து செய்ய அறி விக்கை வெளியிட்டுள்ளது பற்றி யும் விவாதிக்கப்பட்டதாக கூறப் பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்து வதை ஊக்குவிக்கவும், அரசின் ஆணையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களை ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரி விக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி கேட்டுக் கொண்டுள்ளதாக வும் சுற்றுச்சூழலை மீட்டெடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கை களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கு மாறும் அவர் அறிவுறுத்தியுள்ள தாகவும் அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.