tamilnadu

img

மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டம் தேவை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, ஆக. 22 - மருத்துவர்கள் பாது காப்பு சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வர வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது‌.  

மேற்கு வங்க பெண் மருத்துவர் மீதான பாலியல் வன்முறை, படுகொலைக்கு நீதி கேட்டு வியாழனன்று (ஆக.22) சென்னை உயர் நீதிமன்றம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது செய்தியா ளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.சிவக்குமார்,

“இந்தியாவில் பெண்கள் மீதான வன் முறை, படுகொலைகள் தொடர்கிறது. பெண்கள் வாழ தகுதியற்ற நாடாக இந்தியா மாறி வருகிறது என்று 4 ஆண்டுகளுக்கு முன்பே தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்த்து. நாளொன்றுக்கு 86 பெண்கள் பாலியல் வன்புண ர்ச்சிக்கும், ஒரு மணி நேரத்திற்கு 46 பெண்கள் வன்முறைக்கும் உள்ளாக் கப்படுவதாக குற்றவியல் ஆவண காப்பகம் தெரி விக்கிறது. இதன் தொடர்ச்சி யாகவே மேற்குவங்க மருத்துவர் படுகொலையை யும் பார்க்கிறோம்” என்றார்.

  மருத்துவர்கள் பாது காப்பு கேட்டு நாடு முழு வதும் போராடி வருவதால் மருத்துவத் துறையே முடங்கி உள்ளது. மருத்து வர்கள் கேட்பது போல மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வர வேண்டும் “ என்றும் அவர் கூறினார். சங்கத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட் டத்தில், வழக்கறிஞர்கள் விஜயகுமார், வீரமார்த் தினி, பார்த்திபன், பா.ஹேமா வதி ஆகியோர் பேசினர்.