சென்னை, நவ. 20 - மாற்றுத்திறனாளி குடும்பங் களுக்கு நிபந்தனையின்றி மகளிர் உரிமைத் தொகை வழங்க கோரி திங்களன்று (நவ.20) மாநிலம் முழுவதும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு செப்.15 முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் ஏற்கெனவே பெற்று வரும் உதவித்தொகையை காரணம் காட்டி இந்த உரிமைத் தொகை மறுக்கப்பட்டு வரு கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை நான்கு சக்கர வண்டி (கார்) என்று பதிந்து உரிமைத் தொகை மறுக்கப்படு கிறது.
ஆண் அல்லது பெண் மாற்றுத்திறனாளி குடும்பத் தலைவராக இருந்தாலும், மனவளர்ச்சி, மூளை வளர்ச்சி குன்றியவர்கள் இருந்தாலும் உரிமைத் தொகை மறுக்கப்படு கிறது. இரண்டு சிலிண்டர் வைத் திருந்தாலும் விண்ணப்பங்களை அதிகாரிகள் நிராகரிக்கின்றனர்.
எனவே, நிபந்தனையின்றி அனைத்து மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கும் உரிமைத் தொகையை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் வலியுறுத்தி வரு கிறது. இதனை வலியுறுத்தி, இந்த மனு கொடுக்கும் இயக்கம் நடை பெற்றது. இதில் உதவித்தொகை கிடைக்காத மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று நேரடியாக 24 மாவட்டத்தில் மனுக்களை அளித்தனர்.
இதன் ஒருபகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. ஆட்சி யர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தரை தளத்திற்கு நேரில் வந்து சங்கத் தின் பொதுச் செயலாளர் பா.ஜான் சிராணி உள்ளிட்டோரிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். மாவட்ட நிர்வாகிகள் எஸ்.மனோன்மணி, சேகர் (மத்திய சென்னை), ஜெயச்சந்திரன், நடராஜன் (வடசென்னை) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.