விழுப்புரம், ஜூன் 11- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் 100 நாள்வேலை கேட்டு விக்கிரவாண்டி, கூட்டேரிபட்டு ஆகிய இடங்களில் உள்ள பிடிஒ அலுவலகங்கள் முன்பு காத்தி ருக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் அய்யனார் தலைமை தாங்கினார். போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஜி.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒன்றிய பொருளாளர் பி.உமா உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். உடனடியாக வட்டார வளர்ச்சி அலு வலர் குலோத்துங்கன் சங்க நிர்வாகிகளை அழைத்துப்பேசி வரும் வியாழக்கிழமை முதல் வேலை வழங்குவதாக உறுதி அளித்தார்.
இதனையேற்று சங்கத்தினர் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்து கலைந்து சென்றனர். இதேபோன்று கூட்டேரிப்பட்டிலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பும் காத்தி ருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மணி கண்டன் தலைமை தாங்கினார், சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.முருகன், மாவட்ட துணைச் செயலாளர் எம்.முத்து வேல் ஆகியோர் கலந்து கொண்டனர். உட னடியாக வட்டார வளர்ச்சி அலுவலத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை அழைத்துப் பேசி உடனடியாக வேலை வழங்குவதாக உறுதி அளித்தனர்.
இதனை அடுத்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்ற னர். போராட்டத்தில் நிர்வாகிகள் ஒன்றிய பொருளாளர் அங்கமுத்து, ஒன்றிய செயலாளர் பாவாடை உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.