சென்னை,செப்.23- சென்னை கண்ணப்பர் திடலில் வசித்து வந்த 114 குடும்பங்களுக்கு, முன் பணமின்றி வீடுகள் ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கடந்த 22 ஆண்டுகளாக சென்னை கண்ணப்பர் திடலில் மனிதர்கள் வாழத் தகுதியற்ற கட்டிடத்தில் வாழ்ந்து வந்த மக்களுக்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் இயக்கங்கள் முன்னெடுத்து நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக, கண்ணப்பர் திடல் மக்களின் வாழ்விட உரிமை கோரிக்கை இன்று சாத்தியமாகியுள்ளது.