tamilnadu

img

குடியாத்தம்,பேர்ணாம்பட்டு தாலுகாவில் மக்கள் சந்திப்பு இயக்கம்

குடியாத்தம்,பேர்ணாம்பட்டு தாலுகாவில்  மக்கள் சந்திப்பு இயக்கம்

வேலூர், ஜூன் 18 - மோடி அரசின் மதவெறிக்கு எதிராக வும், மக்கள் விரோத கொள்ளைகளை எதிர்த்தும், தமிழக அரசு மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்க நடைபயணம் குடியாத்தம் தாலுகா குழு சார்பில் செதுக்கரை - விநாயகபுரம் பாலிடெக்னிக் கூட்ரோடு பகுதியில் தாலுகா குழு உறுப்பினர் எம்.அண்ணாமலை தலை மையில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா கலந்து கொண்டு பொது மக்களிடம் துண்டுபிரசுரங்களை வழங்கி பேசினார். இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.தயாநிதி, செ.ஏகலைவன், கே.சாமிநாதன், தாலுகா செயலாளர் எஸ்.சிலம்பரசன், கமிட்டி உறுப்பினர்கள் எஸ்.கோட்டீஸ்வரன், ஆர்.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக கிளை செயலாளர் சண்முகம் நன்றி கூறினார். செதுக்கரை, விநாயகபுரம் பகுதிகளில் குடிமனை பட்டா இல்லாத அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும், செதுக்கரை பகுதியில் ரேஷன் கடைக்கு புதிதாக இடம் தேர்வு செய்து கட்டித்தர வேண்டும். காந்திநகர் சமுதாயக்கூடத்தை உடனடி யாக மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும், விநாயகபுரத்தில் மகளிர் சுகா தார வளாக கட்டிடம் கட்டித் தர வேண்டும். விநாயகபுரம் கூட் ரோட்டில் குற்ற செயல்கள் நடப்பதை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பேர்ணாம்பட்டு பேர்ணாம்பட்டு தெற்கு தாலுகாகுழு சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் செயலாளர் சி.சரவணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் பி.குண சேகரன் வட்டக்குழு உறுப்பினர்கள் சி.என்.ராம்குமார் ஆர்.கோவிந்தராஜ், மூத்ததோழர் சி.எம்.நடராஜன்ஆகியோர் கலந்து கொண்டனர். கார்கூரில் துவங்கி பல்லலகுப்பம். மேல்பட்டி, வளத்தூர்,பக்கிரிப்பல்லி. சரகுப்பம், மேல்செட்டிகுப்பம். சின்ன செட்டிகுப்பம், கீழ்செட்டிகுப்பம். கார்த்தி கேயபுரம், காக்காதோப்பு, மேல் ஆலத்தூ ரில் நிறைவுபெற்றது. முன்னதாக செம்பேட்டில் நடைபெற்ற பிச்சாரத்தில் மாநிலகுழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, மாவட்டசெயலாளர் சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.தயாநிதி, பி. காத்தவராயன் பங்கேற்றனர். இந்த பிரச்சார இயக்கத்தில்  பத்தலப்பல்லி அணையை விரைவாக கட்டி முடிக்க வேண்டும், பேர்ணாம்பட்டு பகுதியில் புதிதாக அரசு கலை கல்லூரியை அமைக்க வேண்டும், பேர்ணாம்பட்டு கற்றி உள்ள தோல் கழிவுகளை சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தி முறைப்படுத்த வேண்டும், குடி யாத்தம் நகரின் 36-வார்டுகளில் சேரும் குப்பைகளை செட்டிகுப்பம் ஊராட்சி பகுதியில் கொட்டுவதால் செட்டிகுப்பம், ராஜகுப்பம் நெல்லூர்பேட்டை செருவங்கி ஊராட்சி பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைகிறது. இதனால் குடிநீர் விவ சாயம் முற்றிலுமாக பாதிக்கும் ஆபத்து உள்ள தால் உடனடியாக குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும், குடியாத்தம் முதல் பேர்ணாம்பட்டு செல்லும் பேர்ணாம்பட்டு முதல் குடியாத்தம் செல்லும் அனைத்து பேருந்துகளும் பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டது.