tamilnadu

img

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்
வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு கல்வி மற்றும் நிறுவனங்களின் வேலை வாய்ப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவை இன்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்தார். மேலும், சீர்மரபினருக்கு 7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கவும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மசோதாக்களும் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் எம்பிசி-வி என்ற உள்பிரிவு உருவாக்கப்பட்டு, அதன் மூலம் அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மசோதா வகை செய்கிறது. இந்த மாற்றம்தற்காலிகமானது, சாதிகள் குறித்த புள்ளி விவர சேகரிப்புக்குப் பின் 6 மாதம் கழித்து மாற்றியமைக்கப்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
இன்னும் சற்று நேரத்தில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். பாமகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்கும் நோக்குடன் முதல்வர் எடப்பாடி இந்த மசோதாவை நிறைவேற்றி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

;