tamilnadu

img

பெற்றோர்-ஆசிரியர் கழக நிதி ரூ.50-க்கு மேல் வசூலிக்கக் கூடாது...  பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...  

சென்னை:
மாணவர் சேர்க்கையின் போதுபெற்றோர்-ஆசிரியர் கழக நிதியாக 50ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது என்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்கும்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தலின்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைகல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவர் சேர்க்கையின் போது பெற்றோர்-ஆசிரியர் கழகநிதியாக 50 ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது. மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். 5 வயது குழந்தைகள் அனைவரும் பள்ளிகளில் சேர்ந்திருப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். தங்களது பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவரும் 9 ஆம் வகுப்பை தொடர்கிறார்களா என்பதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

;