tamilnadu

img

பபாசிக்கு புதிய தலைவர்கள் தேர்வு

சென்னை,டிச.3- தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு (பபாசி) புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து, பபாசி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு (பபாசி) இரண்டு வருடங்க ளுக்கு ஒருமுறை நடை பெறும் நிர்வாகக்குழு தேர்தல் கடந்த மாதம் 28 ஆம் தேதி சென்னையில் நடந்தது. இதில், ஆர்.எஸ்.சண்முகம் (ஸ்ரீ செண்பகா பதிப்பகம்) தலைவராகவும், எஸ்.கே.முருகன் (நாதம் கீதம் புக் செல்லர்ஸ்) செய லாளராகவும், ஏ.கோமதி நாயகம் (சங்கர் பதிப்பகம்) பொருளாளராகவும், துணைத் தலைவர்களாக நாகராஜன் (பாரதி புத்தகாலயம்), ஒளிவண்ணன் (எமரால்டு பப்ளிஷர்ஸ்), இணைச் செய லாளராக எஸ்.சுரேஷ்குமார் (நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  நிர்வாகக்குழு, எம்.பாலாஜி (பாலாஜி புக் செல்லர்ஸ் - டிஸ்ட்ரிப்யூட்ட ர்ஸ்)- துணை இணை செயலாளர், பஞ்சந்தம் (புத்தக பூங்கா), செயற்குழு உறுப்பினர் (தமிழ்)- முத்துக்கருப்பன் ( ஸ்ரீ செல்வ நிலையம்), முத்துச்சாமி (கீதம் பப்ளிகேஷனஸ்), சீனிவாசன் (நியூ புக் லேண்டஸ்), வேடியப்பன் (டிஸ்கவரி புக் பேலஸ்), செயற்குழு உறுப்பினர் (ஆங்கிலம்) - மனோகரன் (விவா புக்ஸ் பிரைவேட் லிமி டெட்), சிவா குமார் (ஸ்ரீ சிவா புக்ஸ்), சுரேஷ் (தி ஏசியன் பப்ளிகேஷன்ஸ்), சுவாமி நாதன் (சாம்ஸ் பப்ளிஷர்ஸ்), நிரந்தர புத்தகக்காட்சி உறுப்பினர் (தமிழ்)- மகாதேவன் (மகேஸ்வரி புத்தக நிலையம்), முனிசாமி (சிவகுரு பதிப்பகம்), நிரந்தர புத்தகக்காட்சி உறுப்பினர் (ஆங்கிலம்)- தேவானந்த் (ஸ்ரீ யுனிவர்சல் புக் ஹவுஸ்), குமரன் (எஸ்.எல்.என் புக் செல்லர்ஸ்) ஆகியோர் தேர்வு செய்ய ப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தக்குழு தான்2020 ஜனவரியில் நடைபெறும் சென்னை புத்தக காட்சியை நடத்துகிறார்கள்.  இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.