tamilnadu

img

சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில மாநாடு

சென்னை, நவ. 5- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல க்குழுவின் 4வது மாநில மாநாடு 2024ஆம் ஆண்டு ஜனவரி 9ந் தேதி தென்சென்னை யில் நடைபெறுகிறது. இந்த மாநாட் டிற்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் சனிக்கிழமையன்று (நவ.4) சைதாப்பேட்டையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய நலக் குழுவின் பொதுச் செயலாளர் எம்.ராம கிருஷ்ணன், “25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்யக்கோரி இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டங்களை நடத்தின. சிறுபான்மை மக்கள் நலக்குழு  அனைத்து தரப்பினரையும் ஒருங்கி ணைத்து நடத்திய போராட்டத்தின் காரணமாக ஒரு பகுதியினர் விடுதலை செய்யப்பட்டனர். எஞ்சியவர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு பரிந் துரை அனுப்பியும், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். சிறுபான்மை மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் நலக்குழு செயல்பட்டு வரு கிறது. எதிர்கால போராட்டங்களை வலு வாக முன்னெடுத்துச் செல்ல இந்த மாநில மாநாடு திட்டமிடும்” என்றார்.

இந்தக் கூட்டத்திற்கு அமைப்பின் தென்சென்னை மாவட்டத் தலைவர் பி.ஜீவா தலைமை தாங்கினார். நலக் குழுவின் மாவட்டச் செயலாளர் ஒய்.இஸ்மாயில், சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ் மற்றும் பா.பாலகிருஷ்ணன் (சிஐடியு), ம.சித்ர கலா (அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்), தி.சந்துரு (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்), எஸ்.ஆனந்த்குமார் (இந்திய மாணவர் சங்கம்), பாமிதா (தமுஎகச), நலக்குழு நிர்வாகிகள் க.வனஜகுமாரி, எஸ்.முகமது ரஃபி, தமீம் பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வரவேற்புக் குழுத் தலைவராக க.பீம்ராவ், செயலாளராக ஒய்.இஸ்மா யில், பொருளாளராக கே.மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.