நாமக்கல், ஜூலை 14- கோழிப் பண்ணைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கொடுத்த மனுக் கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண் டித்து, நாமக்கல் வருவாய் ஆய்வாளர் அலு வலகம் முன்பு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செங்கோடு அருகே, எலச்சிபாளை யம் ஒன்றியம், கோக்கலை கிராமம், எளை யம்பாளையத்தில், கல்குவாரி மற்றும் கிர ஷர் அருகில் கோழி பண்ணை அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்கள், விவசாயிகள் ஜூன் 4 அன்று கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சி யர், சுகாதாரதுறை, மாசுகட்டுபாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தனர். ஆனால், இந்த மனுக்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதை கண் டித்து வியாழனன்று வருவாய் ஆய்வாளர் (பொறுப்பு) பாலசுப்ரமணியனிடம் கோரிக்கை மனு அளித்தனர். எளையாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி முரு கேசன் தலைமையில் நடைபெற்ற இந்த மனு கொடுக்கும் நிகழ்வில், கோக்கலை ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.