tamilnadu

img

ரூ.42 ஆயிரம் கோடிக்கு வேளாண் பட்ஜெட்

சென்னை, பிப். 20- தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக் கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேர வையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் செவ்வாயன்று (பிப்.20) தாக்கல் செய்தார்.  அதில் வேளாண்துறைக்கு 2024 - 25 ஆம் ஆண்டுக்கு ரூ.42 ஆயிரம் கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. “விவசாயி களுக்கு பயிர்க் காப்பீடு வழங்க ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

அது சார்ந்த அறி விப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

பயிர்க் காப்பீடு: இயற்கைச் சீற்றங் களால் விவசாயிகளுக்கு ஏற்படும் வரு வாய் இழப்பிலிருந்து அவர்கள் மீண்டு வரும் வகையில் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17, 18-ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் அதிகம் பாதிப் படைந்த தூத்துக்குடி மாவட்டத்தில் மழை யால் ஏற்பட்ட பயிர்ச் சேதத்திற்காக 14 கோடியே 55 இலட்சம் 9,988 விவசாயி களுக்கு இழப்பீட்டுத் தொகை உடனடி யாக வழங்கப்பட்டது. 2024-2025 ஆம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த 1,775 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் படும்.

தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்:  ஊட்டச்சத்து மிகுந்த சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் வரகு, பனிவரகு, குதிரைவாலி, சாமை, தினை போன்ற குறுதானியங்கள் ஆகிய வற்றின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசால், 25 மாவட்டங்களைக் கொண்டு ஏற்கனவே இரண்டு சிறுதானிய மண்டலங்கள் உரு வாக்கப்பட்டுள்ளன. 2023-2024-ஆம் ஆண்டு முதல் 2027-2028 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் இரண்டு மண்டலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட் டம் 2024-2025 ஆண்டிலும் 65 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொட ர்ந்து செயல்படுத்தப்படும்.

1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள்
கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அனைத்து அறிவிப்புகளுக்கும் அரசா ணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களின் மொத்த சாகுபடி இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. உணவு தானிய உற்பத்தி 116 லட்சம் மெட்ரிக் டன்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மானிய விலையில் தொடர்ந்து விவசாயக் கருவி கள் வழங்கப்பட்டு வருகின்றன.  45 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப் பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் விவ சாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 

ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம்
“ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங் கள் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தித் திற னை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஒரு கிராமம் ஒரு  பயிர் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப் படும். விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்து செயல் விளக்கங்கள் வழங்கப்படும். நிரந்தர பூச்சி கண்காணிப்புத் திடல்கள் அமைக்கப்படும்.

எண்ணெய் வித்துப் பயிர்சாகுபடி விரிவாக்கம் 
‘துவரை சாகுபடி பரப்பு விரிவாக்க இயக்கம்’ உருவாக்கப்படும். துவரை சாகுபடி 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நம்மாழ்வார் விருது
சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ் வார் விருது வழங்கப்படும். ஆதிதிரா விடர் பழங்குடி விவசாயிகளுக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு.

பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகு படியை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி  நிதியில் விவசாயிகளுக்கு நடவு செடி கள். ரூ.3.64 கோடியில் வறண்ட நிலங் களில் ஒருங்கிணைந்த “தோட்டக்கலை மேம்பாட்டு திட்டம்”. பட்டதாரி இளை ஞர்களை வேளாண் தொழில் முனை வோராக்க 100 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் உள்ளிட்ட அறி விப்புகளையும் அமைச்சர் வெளி யிட்டார்.

முக்கிய அம்சங்கள்
F    ரூ.2லட்சம் விவசாயிகளுக்கு திரவ உயிர் உரங்கள் வழங்க ரூ.7.5 கோடி 
F    நடப்பு ஆண்டில் 50,000 பாசன மின் இணைப்புகள் வழங்கப்படும்
F    மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு
F    எள் சாகுபடியை அதிகரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு
F    ரூ.2 கோடியில் 10லட்சம் வேப்பமரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்
F     ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.18கோடி நிதி ஒதுக்கீடு
F    ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு.
F     “ஒரு கிராமம் ஒரு பயிர்” திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்
F     விதை மரபணு தூய்மையை உறுதிசெய்ய கோவையில் ஆய்வகம்
F     கன்னியாகுமரியில் தேன் பொருட்களுக்கு பரிசோதனைக் கூடம் அமைத்து பயிற்சி வழங்க ரூ.3.60 கோடி நிதி.
F     சர்க்கரை ஆலைகளை மேம்படுத்த ரூ.12.4 கோடி நிதி
F     வறண்ட நிலங்களில் தோட்டக்கலை மேம்பாட்டுக்கு ரூ.3.64 கோடி
F     விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்க ரூ.2.70 கோடி மானியம்
F     கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.73 கோடி நிதி
F     விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க ரூ.1775 கோடி

சட்டமன்றத்தில் 
4வது முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பது  மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த பட்ஜெட்டில் ரூ.3,377 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. இயற்கை விவசாயம், சிறு தானிய உற்பத்தி, ரூ.16,500 கோடி பயிர்க்கடன் உள்ளிட்டவை வரவேற்புக்குரிய அம்சங்கள். நெல், கரும்பு பயிர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கவும் வேண்டுகிறோம். 

பெ.சண்முகம்

மாநிலத் தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்