சென்னை, ஏப். 30 - உழைக்கும் தொழிலாளர் குடும்பங்கள், கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்ந்து உன்னத நிலைபெற நெஞ்சார வாழ்த்துவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மே தின வாழ்த்துக்களை தெரிவித்துள் ளார். மே 1 அன்று உலகம் முழுவதும் தொழி லாளர்கள் மே தினத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: “’காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்’ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொழிலாளர்களின் தியாக உழைப்பைப் போற்றிப் பாடுவார்.
தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்தில் பல மணி நேரம் வேலை செய்திட வாட்டி வதைக்கப்பட்ட தொழிலாளர் சமுதாயம் எட்டு மணி நேர வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலி யுறுத்தி ரத்தம் சிந்திப் போராடி, உயிர்ப் பலி தந்து தொழிலாளர் சமுதாயம் பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள் தான் மே நாள். திமுக தொழிலாளர்களை உயிராக மதிக்கும் இயக்கம். 1969-ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற மறைந்த முன்னாள் முத லமைச்சர் கருணாநிதி தலைமையில் அமைந்த திமுக அரசுதான் தொழிலாளர் நலனில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தனியே தொழிலாளர் நலத் துறையையும், தொழிலாளர் நல அமைச்சகத்தையும் ஏற்படுத்தியது.
.1969-ஆம் ஆண்டில் மே முதல் நாளை ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை நாளாக அறிவித்துச் சட்டம் இயற்றி நடைமுறைப் படுத்தப்பட்டது. 2021-இல் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் தோழனாக பல்வேறு புதிய திட்டங்களை கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றி வருகிறோம். 18 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற 16 லட்சத்து 72 ஆயிரத்து 785 உறுப்பினர் களுக்கு ரூ. 1,304 கோடியே 55 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் மட்டும் 19 ஆயிரத்து 576 தொழிலாளர் களுக்கு ரூ. 11 கோடியே 28 லட்சம் மதிப்பி லான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டுள்ளன. குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் 44 தொழில்களுக்கு செய்யப்பட்டுள்ளது. மேலும், 3 புதிய தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு பல்வேறு தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர்.
உப்பு உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் மற்றும் இணையவழி தற்சார்பு தொழிலில் ஈடுபடும் உடலுழைப்புத் தொழி லாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர்கள் நல வாரியமும், தமிழ்நாடு இணையவழி தற்சார்பு தொழி லாளர்கள் நலவாரியமும் புதிதாக அமைக்கப் பட்டுள்ளன. அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் ஓய்வூதியம் ரூ.1,000/- என்பது ரூ.1,200/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் ரூ. 2 கோடியே 40 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலக வளாக கட்டடம் கட்டப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை 10 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் நிறுவனங்களில் அனைத்து பணியாளர்களும் அமர்வதற்கு, அவர்கள் பணிபுரியும் இடங்களில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தித் தருதல் மற்றும் பணி யாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பான குடிநீர், கழிப்பிடம், ஓய்வு அறை மற்றும் உணவருந்தும் அறை மற்றும் முதலுதவி வசதிகள் ஆகியவற்றை உறுதி செய்யும் வகை யில் 1947-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு தொழிலாளர் நலன்கள் இந்த அரசினால் பாதுகாக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் நலனில் முழு அக்கறை செலுத்தி தொழிலாளர்களையும், அவர்களின் குடும்பங்களையும் காத்து வரும் திமுக அரசு சார்பில் தொழிலாளர் சமுதாயம் நல வாழ்விலும், பொருளாதார மேம்பாட்டிலும் முன்னேற்றங்கள் பல கண்டு உயர்ந்திட என் நெஞ்சம் நிறைந்த ‘மே’ தின நல்வாழ்த்து களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சிஅடைகிறேன்.” இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.