tamilnadu

img

முதல்வர் நிவாரண நிதிக்கு சத்துணவு ஊழியர்கள்  ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு....  

சென்னை:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர் களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியம் வழங்க தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். 

இதுகுறித்துசங்கத்தின் மாநிலத் தலைவர் ப.சுத்தரம்மாள், பொதுச்செயலாளர் அ.நூர்ஜஹான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:    

கொரோனா பேரிடர் எனும் இக்கட்டான காலகட்டத்தில் தாங்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள் ளீர்கள். பொறுப்பேற்ற நாளிலிருந்து கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.கொரோனா பெருந்தொ ற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும்வகையில் சத்துணவு ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மனமுவந்து வழங்க முடிவெடுத்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறி யுள்ளனர்.